Friday, January 29, 2016

வெண்பா உரையாடல் - பாகம் 2


பாகம் – 2

ரா: முதல்ல எழுத்துலேர்ந்து ஆரம்பிக்கிறேன்.
சு: என்ன கிண்டல் பண்றியா? எனக்கு 247 எழுத்துமே நல்லாத் தெரியும்டா
ரா: இப்படி குறுக்கப் பேசாதடா. முதல்ல தமிழ்ல 247 எழுத்துகள்னு சொல்லி எல்லாரையும் பயமுறுத்துறதை நிறுத்துங்கடா. மொத்தமே 31 எழுத்துகள் தாண்டா இருக்கு.
சு: என்னடா புதுக்கதை உடுற?
ரா; கதையில்லடா. உண்மை. உயிர் 12 மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 31. வரி வடிவத்தையெல்லாம் ஒலி வடிவமா கணக்குல எடுக்காதே. அப்படின்னா இங்கிலீஷ்ல அப்பர் கேஸ் 26, லோயர் கேஸ் 26 மொத்தம் 52 எழுத்துகள்னு சொன்னா ஒத்துக்குவியா?
சு: மாப்ள, புரியுது ஆனா புரியலை
ரா: என்னடா வரும் ஆனா வராது மாதிரி. ரொம்ப ஈஸியான மேட்டர்டா இது. இப்போ நாம படிக்கறப்போ லை, னை யோட வரி வடிவமெல்லாம் வேற மாதிரி இருந்திச்சிடா. அப்புறமா சுலபமாக்கினாங்க. ஆனால் அந்த உச்சரிப்பு ஒலி மாறலை. இங்கிலீஷ்ல நீ அப்படிங்கறதை nee அப்படின்னு எழுதுற மாதிரி தமிழ்ல ந்ஈ அப்படின்னு எழுதவுட்டா 31 எழுத்துகளை வச்சே நீ எழுதலாம்ல. ஆனா அப்படி விடாம நீ அப்படின்னு ஒரு வரி வடிவத்தை உருவாக்கி வச்சிருக்காங்க.
சு. அட, இதுக்குள்ள இவ்வளவு மேட்டர் இருக்கா.
ரா. சரி அதை விடு. நாம் எழுத்து இலக்கணத்துக்குப் போவோம். 2 விதமா எழுத்துகளைப் பிரிக்கலாம். 1. முதல் எழுத்து 2. சார்பு எழுத்து
சு: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா. முதல்ல இலக்கணமே 5 வகைன்னு சொன்னே. ஆனால் 3 தெரிஞ்சுக்கிட்டா போதும்னு சொன்னதால பொறுத்துக்கிட்டேன். இப்ப எழுத்துக்குள்ள 2 வகைன்னா என்னடா?
ரா: டேய், இங்கிலீஷ் கிராமர்ல tenses, voices, noun, verb அப்பிடி இப்பிடின்னு KGலேருந்து படிக்கலை. பொறுமையாக் கேளுடா. எல்லாம் ஈஸியா புரியும். 
சு: சரிடா
ரா: முதல் எழுத்துன்னா நம்ம தமிழ் மொழிக்கு முதலான எழுத்துகள்டா. உயிர் 12, மெய் 18 மொத்தம் 30. உயிர் எழுத்துகளை குறில், நெடில்னு ரெண்டா பிரிக்கலாம். அ, இ, உ, எ, ஒ – குறில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – நெடில்
சு: அது சரி 5 குறிலுக்கு 5 நெடில்தானே இருக்கணும். அது என்னடா ஐ ஒள அப்படின்னு 2 எக்ஸ்ட்ரா பிட்டு இருக்கு.
ரா: அப்புடிக் கேள்டா. ஐ, ஒள இரண்டும் கூட்டுயிர்கள் எனப்படும். ஐ என்பதை அஇ எனவும் ஒள என்பதை அஒ என்றும் இரு உயிர்களைக் கூட்டி சொல்லலாம். இப்பப் புரியுதா ஏன் 5 குறிலுக்கு 7 நெடில் வருதுன்னு.
சு: சூப்பர்டா. நம்ம மொழிக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?
ரா: அதே மாதிரி மெய்யெழுத்துகள் 18-ஐயும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று 3 வகையா பிரிக்கலாம். 
சு. ஆமாம். இதையாவாது அளவா ஆறு ஆறாப் பிரிச்சிருக்கா இல்லை….?
ரா: இந்த நக்கல்தானே வேணாங்கிறது. எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோன்னு ஒரு பாட்டு வருமே அதை மாதிரி ஆறு ஆறா மெய்யெழுத்தைப் பிரிச்சுக்கோ, அது வல்லினம், மெல்லினம், இடையினும்னு தெரிஞ்சுக்கோ. எப்பூடி?
சு: அட இது நல்லா இருக்கே.
ரா: க் ங் இப்படின்னு சொன்னா ரொம்ப நேரமும் எடுக்கும் கஷ்டமாவும் இருக்கும். அதனால் அதை அகர வரிசையிலே சொல்லிக்கலாம். க ச ட த ப ற – வல்லினம், ங ஞ ண ந ம ன – மெல்லினம், ய ர ல வ ழ ள – இடையினம். அதாவது நாம காதலிக்கிறப்போ மெல்லினமாத் தெரியிற பெண்கள், கல்யாணத்தப்ப இடையினமாகவும் கொஞ்ச வருஷம் போனது வல்லினமாகவும் மாறிடுறாங்கன்னு சொன்னா காமெடியா இருக்கும். 
சு: ஏண்டா என் வீட்டில நான் உதை வாங்கணும்னு உனக்கு எவ்வளவு நாளா ஆசை.
ரா: உன்னை அடிக்க வந்தா அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போடு. வல்லினமான பசங்கள்லாம் மெல்லினமான பெண்களின் இடையினத்துக்கு அடிமைன்னு ஒரேப் போடாப் போட்டு எஸ்கேப் ஆயிடு.
சு: மாப்ள இப்ப நீ சொன்னது வெண்பா இல்லையே?
ரா: நண்பா அது வெண்பா இல்லடா ஒரு காமெடி வசனம். சரி எனக்கு வீட்லேருந்து வார்னிங் கால் வருது. அப்புறமா நேரம் இருக்கும்போது எழுத்து இலக்கணத்தை கண்டினியூ பண்ணலாம். 
ராஜாவின் மனைவி: ஏய் ராஜா, வீக் எண்ட்ல வீட்டு வேலைய செய்யாம என்ன வெண்பா அது இதுன்னு யாரு கூட வெட்டியா பேசிக்கிட்டு இருக்க. ஓ சுப்ரமணி நீங்கதானா? நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க.
சு: ஹி ஹி பரவாயில்லை விடுங்க. அசை கத்துக்கணும்னா இந்த வசை எல்லாம் கண்டுக்கக்கூடாது.
ரா ம: சுப்ரமணி என்ன சொல்றாரு?
ரா: அது யாப்பு. சரி மாப்பு நீ கெளம்பு.
சு: யாப்பா, மாப்பு உனக்கு சிஸ்டர் கிட்ட இருக்குடா ஆப்பு. அப்புறம் பார்க்கலாம்டா.

No comments:

Post a Comment