Wednesday, June 20, 2012

சொல் இலக்கணம்

சொல் (Word)

ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளோடு சேர்ந்தோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும். சொல்லுக்குப் பதம், கிளவி, மொழி, வார்த்தை என பிற பெயர்களும் உண்டு.

ஓரெழுத்து ஒரு மொழி (One letter word)

ஓர் எழுத்து தனியே நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழியும் அதன் பொருள்களும்

கீழ்க்கண்ட ஓரெழுத்து ஒரு மொழியில் நடைமுறையில் நாம் பயன்படுத்தும் கை, தீ, தை, நீ, வா, மை, வை, பூ, பை, போ போன்ற சில சொற்களைத் தவிர்த்து பெரும்பாலானவை பாக்களில் பயன்படுத்தக்கூடியவை.

– எட்டு, அழகு சிவன்
– பசு, ஆன்மா, எருது
– ½-யின் தமிழ் வடிவம்
– ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
– சிவன், ஆச்சர்யம், இரண்டு
– ஊன், இறைச்சி, உணவு
– வினா எழுத்து, ஏழு
– அம்பு, வினாப் பெருக்கம், இறுமாப்பு
– தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
– மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
ஒள – உலகம், ஆனந்தம்
– கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா – சோலை, காத்தல், காவல்
கி – இறைச்சல் ஒலி
கு – பூமி, உலகம், குற்றம்
கூ – பூமி, உலகம், கூகை
கை – உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
கோ – அரசன், தலைவன், பசு, இறைவன்
கெள – கொள்ளு, தீங்கு, பற்று
சா – சாதல், இறத்தல், சோர்தல்
சி/சீ – இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்பு
சு – விரட்டுதல், சுகம், மங்களம்
சே – எருது, சிகப்பு, மரம்
சை – கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
தா – தருதல், கொடுத்தல், கேடு
தீ – நெருப்பு, சினம், தீமை, நரகம்
து – உண், அசைதல், உணவு
தூ – வெண்மை, தூய்மை, பகைமை
தே – தெய்வம், கடவுள், அருள்
தை – மாதம், தைத்தல், அலங்காரம்
நா – நாக்கு, நடு, அயலர்
நீ – முன்னிலை
நே - அன்பு, அருள், நேயம்
நை - நைதல், வருந்துதல்
நொ/நோ - துன்பம், நோய்
– நூறு
பா - பாட்டு, அழகு, பாதுகாப்பு
பி - அழகு, பிறவினை விகுதி
பீ - பெருமரம், மலம்
பூ - மலர், பூமி, பிறப்பு
பே - நுரை, மேகம், அச்சம்
பை - பசுமை, கைப்பை, இளமை (பையன்)
போ - போதல், செல்லுதல்
- சந்திரன், சிவன்
மா - பெரிய, விலங்கு, மேன்மை, மாமரம்
மீ - மேலே, உச்சி, ஆகாயம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - அன்பு, மேன்மை, மாதம், மேலே
மை - அஞ்சனம், கண்மை, இருள், மலடு
மோ - மோத்தல், முகர்தல்
- தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா - யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
- கால் பாகம்
வா - வருதல், தாவுதல், உண்டாக்குதல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர், விரும்புதல், பறவை
வை - கூர்மை, வைத்தல், வைக்கோல்
வௌ -கைப்பற்று, ஒலிக்குறிப்பு, திருகு

எழுத்துத் தொடர்மொழி

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து நின்று பொருள் தந்தால் அது எழுத்துத் தொடர்மொழி எனப்படும்.

எ.கா.: புலி, மனிதன், காடு, வீடு

நிலைமொழி, வருமொழி

இரண்டு சொற்கள் இணையும்போது, முதலில் இருக்கும் சொல் நிலைமொழி ஆகும். அதை அடுத்து வரும் சொல் வருமொழி ஆகும்.

எ.கா.: இலக்கணம் + கற்போம் = இலக்கணம் கற்போம்

‘இலக்கணம்’ – நிலைமொழி
‘கற்போம்’ - வருமொழி

No comments:

Post a Comment